வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 22 ஆகஸ்ட் 2015 (23:42 IST)

அதிமுகவினர் போராட்டத்தை ஜெயலலிதா தடுத்து நிறுத்த திருநாவுக்கரசர் கோரிக்கை

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம்:-
 
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் பேட்டியளிக்கவில்லை என்று அவரே கூறிவிட்டார். அவர் விளக்கம் கொடுத்த பிறகும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுகவினர் தொடர்ந்து போராட்டங்கள் நடத்துவது முறையல்ல. சரியல்ல. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதை யாரோ திரித்துக் கூறி,  போராட்டத்திற்கு பின்னணியில் செயல்பட்டுகின்றனர்.
 
மேலும், தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் மீதும், காங்கிரஸ் கட்சியினர் மீதும் அதிமுக நிர்வாகிளும், தொண்டர்களும் கொலைவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
 
மதுவிலக்கு போராட்டத்தை திசை திருப்பவே அதிமுக இது போன்ற போராட்டங்களை நடத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கவனத்திற்கு தெரியாமல் இது போன்ற போராட்டங்கள் நடைபெற வாய்ப்பு இல்லை. எனவே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற முதலமைச்சர் ஜெயலலிதா முன்வர வேண்டும் என்றார்.