1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 21 செப்டம்பர் 2015 (00:34 IST)

டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியாவின் இறுதிச் சடங்கு: அதிமுக - பாமக புறக்கணிப்பு

டி.எஸ்.பி.விஷ்ணுப்பிரியாவின்  இறுதிச் சடங்கில் அதிமுக மற்றும் பாமக கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
 

 
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பியாக கடந்த 7 மாதமாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுப்பிரியா (27). தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரை அசக்கம் செய்ய அவரது உடல், அவரது சொந்த ஊரான கடலூரை அடுத்த கொண்டூருக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, விஷ்ணுப்பிரியாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இதில்,  திமுக, தேசியவாத காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி போன்ற  பல்வேறு கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்பு, அவரது உடல், தென்பென்னை ஆற்றக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.ஆனால், இறுதிச்சடங்கில் அதிமுக மற்றும் பாமகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.