வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2016 (23:33 IST)

அதிமுக அமைச்சர் அறையில் அதிமுக நிர்வாகி தற்கொலை முயற்சி

அதிமுக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அறையில் அதிமுக நிர்வாகி தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை, தலைமை  செயலகத்தில் தமிழக அமைச்சர்களுக்கான அலுவலகம் உள்ளது. இந்த நிலையில், தமிழக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் அலுவலகத்திற்கு வந்த திருவண்ணாமலை அதிமுகமாவட்ட பிரதிநிதி சண்முகம் என்பவர் தனது திடீரென மறைத்து வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்தார். இதனால் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார். விஷம் குடித்த  சண்முகத்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
 
சண்முகம் தனது மகள் வேலைக்காக ரூ.2 லட்சம் பணத்தை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் தரமறுத்ததால் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த தகவலை அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் மறுத்துள்ளார்.