வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (05:13 IST)

நடிகர் பிரபு வீட்டை முற்றுகையிட்ட பெரியார் திராவிட கழகத்தினர் கைது

சென்னையில், நடிகர் பிரபு வீட்டை முற்றுகையிட்ட பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் கைது செய்தனர்.
 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பிரபல தனியார் நகைக்கடை தொடங்கப்பட்டது. அதன் விளம்பரப் படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜூனா, நடிகர் பிரபு, அவரது மகனும் நடிகருமான விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், மஞ்சு வாரியார் ஆகியோர் நடித்து இருந்தனர்.
 
இந்த நிலையில், இந்த நகைக் கடைக்கு சொந்தமான ஈரோட்டு பிரிவு நகைக்கடையில் வாங்கிய கம்மலில் இரும்பு கலந்து இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போர்க்கொடி உயர்த்திவந்தனர்.
 
இதனையடுத்து, அந்த நகைக்கடையை பாராட்டி விளம்பர படத்தில் நடித்த நடிகர் பிரபுவின் சென்னை வீட்டை முற்றுகையிட அக்கட்சியின் மாவட்ட செயலாளர் குமரன் தலைமையில் சிலர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை தி.நகரிலேயே தடுத்து நிறுத்தி, போலீசார் கைது செய்தனர். இதனால் தி நகரில் சிறுது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.