வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 12 நவம்பர் 2015 (15:29 IST)

காவிரி, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் நடிகர் சங்கம் தலையிடாது : விஷால் பகிரங்க அறிவிப்பு

காவிரி, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலையிடாது என்று நடிகர் சங்கத்தின் பொருளாலரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.


 
 
சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷால் “ நான் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “கதகளி” என்ற படத்தில் நடித்துவருகிறேன். அடுத்தது முத்தையா இயக்கத்தில் “மருது” என்ற படத்தில் நடிக்கிறேன். 
 
நடிகர் ராதாரவியுடன் மருது படத்தில் நடிப்பது இன்னும் முடிவாகவில்லை. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க வேண்டும் என்பதே என் முதல் குறிக்கோள். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார் நடிகர் சங்க இடத்தின் பத்திரங்களை ஒப்படைத்து விட்டார். 2017 ஆம் வருடத்திற்குள் நடிகர் சங்க கட்டிடத்தை கண்டிப்பாக கட்டி விடுவோம்.
 
காவிரி நீர் பிரச்சனை, இலங்கைத் தமிழர் விவகாரங்களில் நடிகர் சங்கம் தலையிடாது. அதே நேரம் அதற்கு என்னுடைய தனிப்பட்ட ஆதரவு எப்போதும் உண்டு” என்று தெரிவித்தார்.