வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 28 ஜூன் 2016 (13:27 IST)

சுவாதிக்கு நன்கு தெரிந்தவரே கொலை செய்திருக்க முடியும் : ரயில்வே எஸ்.பி ஆனி விஜயா பேட்டி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியை, அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவரே கொலை செய்திருக்க முடியும் என்று திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
கடந்த வெள்ளிக்கிழமை காலை, சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் நடந்ததால், முதலில் ரயில்வே போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். திருச்சி ரயில்வே எஸ்.பி. ஆனி விஜயா, கடந்த மூன்று நாட்களாக தீவிர விசாரணை செய்தார்  சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடமும் அவர் விசாரணை நடத்தினார்.
 
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது “ இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. சுவாதி கொலையில் புதிய வீடியோ ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதில் கொலையாளியின் உருவம் ஓரளவு தெளிவாக தெரிகிறது. 
 
சுவாதியின் தனிப்பட்ட குணநலன்கள் பற்றி அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன் வேலை செய்தவர்கள் என எல்லோரிடம் விசாரணை செய்து வருகிறோம். 
 
சுவாதிக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான் இந்த கொலையை செய்திருக்க முடியும். மேலும், எல்லா வழியிலும் இந்த விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறோம். நிச்சயம் கொலையாளியை விரைவில் கைது செய்வோம்” என்று கூறினார்.
 
ஆனால், தற்போது சுவாதி கொலை வழக்கு, சென்னை காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.