வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bharathi
Last Modified: ஞாயிறு, 25 அக்டோபர் 2015 (10:05 IST)

86 இந்திய மீனவர்கள் 28ஆம் தேதி விடுதலை :தமிழக அரசு அறிவிப்பு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 86 மீனவர்கள் வரும் 28 ஆம் தேதி விடுவிக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 
 
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி, இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறைகளில் அடைப்பது வாடிக்கையாகி உள்ளது. இவ்வாறு இந்திய மீனவர்கள் 86 பேர் கடந்த பல நாட்களாக இலங்கை சிறைகளில் உள்ளனர்.
 
தமிழக மீனவர்களை விடுவிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதன் விளைவாக இலங்கை சிறைகளில் உள்ள 86 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது.