1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Modified: செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (18:19 IST)

சென்னையில் உள்ள 7 அஞ்சலகங்கள், தேசிய வங்கிகளுடன் இணைப்பு

சென்னையில் உள்ள ஏழு அஞ்சல் அலுவலகங்கள் கண்டறியப்பட்டு, தேசிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. 
 
அண்ணா நகர், அரும்பாக்கம், சேத்துப்பட்டு, ஜவஹர் நகர், பெரம்பூர் பாரக்ஸ், வேப்பேரி, வியாசர்பாடி அஞ்சல் அலுவலகங்கள் ஆகிய ஏழு அலுவலகங்கள் தேசிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
 
இதன் மூலம் வாடிக்கையாளர்கள், எந்தவிதப் பிரச்சினைகளும் இல்லாமல் இந்த அஞ்சல் அலுவலகங்கள் மூலம் தேவையான பணத்தை மணி ஆர்டராகவோ அல்லது வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்பர் போன்ற சேவைகளை எந்த ஒரு தடையும் இன்றி அனுப்பி வைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.