1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2016 (12:29 IST)

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த போதைப் பொருளின் எடை 8 கிலோ ஆகும்.


 
 
இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவரின் பெயர் சந்தோஷ் குமார் என தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் இருப்பது யார். யார் யாருக்கெல்லாம் இதில் தொடர்பு இருக்கிறது என சந்தோஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இதே போல் கடந்த மே மாதம் ஐதராபாத் விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவரிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான போதைப்பொருள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.