வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2015 (05:01 IST)

4 மதிமுக மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் ஐக்கியம்

மதிமுக மாவட்டச் செயலாளர்கள் 4 பேர்  அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தனர்.
 

 
மதிமுக மாவட்டச் செயலாளர்கள் 4 பேர்  அக்கட்சியில் இருந்து விலகி, திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணையப் போவதாக கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், மதிமுகவைச் சேர்ந்த, தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோயல், நெல்லை புறநகர் பகுதி மாவட்டச் செயலாளர் சரவணன், நெல்லை மாவட்டச் செயலாளர் பெருமாள், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் தில்லை செல்வம் ஆகியோர் சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.