வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 16 அக்டோபர் 2015 (05:16 IST)

மதுபாட்டில்கள் கடத்திய பெண்களை மடக்கிப்பிடித்த போலீஸ்

விழுப்புரத்தில் மதுபாட்டில்கள் கடத்திய பெண்களை போலீசார்  மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
 

 
புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் ரயிலில், மதுபான பாட்டில்களை மூன்று பெண்கள் கடத்தி செல்வதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ரயில்நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
 
அப்போது, புதுச்சேரி ரயில் நிலையத்திலிருந்து, விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயிலில், இருந்த உஷா, மேரி மற்றும் லீமா ஆகிய பெண்கள் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 250 மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.  மேலும், அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.