தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை கடற்படையினர் தமிழகத்தைச் சேர்ந்து 14 மீனவர்களை கைது செய்தனர்.
தமிழகத்தில் கனமழை பெய்ததையொட்டி கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வுமையம் கேட்டுக் கொண்டது.
இதனால், கடந்த சில நாட்களாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
தற்போது மழை குறைந்துள்ளதால், மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையை ஒட்டியுள்ள காங்கேசன் துறை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
மேலும், அவர்களின் 3 படகுகளையும் கொண்டு சென்றனர்.