வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (12:08 IST)

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா?

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
 
கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உருவானதால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.  
 
இந்நிலையில் இன்னும் நடத்து முடிக்கப்படாமல் இருக்கும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்தலாமா? வேண்டாமா? என்பது பற்றி ஏப்.14க்கு பிறகே முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  
 
இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னரே, சூழ்நிலையை பொறுத்தே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என தெரிவித்தார். ஆனால், மே மாத இறுதியில் தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.