Last Updated:
வெள்ளி, 28 மார்ச் 2014 (14:44 IST)
குன்றத்தூர் அருகே மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். 2-வது திருமணத்துக்கு தடையாக இருந்ததால் மனைவியை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பெயிண்டர் சந்தோஷ்(30). இவருடைய மனைவி தாரா(26). இருவரும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து இருவரும் குன்றத்தூர் அடுத்த தண்டலம், அண்ணா நகரில் வசித்து வந்தனர்.
கடந்த 2-3-2014 அன்று வீட்டில் உடலில் எரிந்த தீயுடன் தாராவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குன்றத்தூர் காவல்துறையினர் தாராவிடம் மரண வாக்குமூலம் பெற்றனர்.
அப்போது தாரா, “தனது கணவர் சந்தோஷ்தான் குடித்துவிட்டு வந்து தன் மீது சந்தேகப்பட்டு அடித்து உதைத்ததாகவும், இதில் மயங்கி விழுந்த தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தியதாகவும்” கூறினார். பின்னர் சிகிச்சை பலனின்றி தாரா, பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சந்தோசை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் சந்தோஷ், ஒடிசா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் குன்றத்தூர் காவல்துறையினர், ஒடிசா மாநிலம் சென்று அங்கு பதுங்கி இருந்த சந்தோசை துப்பாக்கி முனையில் கைதுசெய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் காவல்துறையினரிடம் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-