வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அதிகபடியான நன்மையை அள்ளித்தரும் ஊறவைத்த வெந்தயம் !!

வெந்தயம் எடுத்துக்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். தினமும் குறைந்தது 5 கிராம் அளவுகள் இதற்கு உதவும். ஊறவைத்த வெந்தயம் அதிகபட்ச நன்மையைத் தருகிறது.

மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்களுக்கு வெந்தயம் தூள் தினமும் மூன்று முறை எடுத்துக்கொள்வதுடன், மீதமுள்ள நாட்களில் தினமும் 900 மி.கி. வெந்தயத் தூள் எடுத்து கொள்வதினால் பெண்களுக்கு வலியுடன் கூடிய மாதவிடாய் குணமாகிறது.
 
வெந்தயம் இயற்கையில் ஆக்ஸிஜனேற்றியாகும். இது இரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்துகிறது. இதனால் தெளிவான ஒளிரும் சருமத்தை அளிக்கிறது.
 
வெந்தயத்தை அரைத்து, குளிர்ந்த கடுகு எண்ணெய்யுடன் கலக்கவும். இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவினால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மயிர்க்காலின் வலிமையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
 
ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறது, இதனால் அனைத்து செரிமான பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது. இதனால் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடையை நிர்வகிக்க உதவுகிறது.
 
வெந்தயம் நீர் தேக்கத்தையும் உடலில் வீக்கத்தையும் குறைக்கிறது. இது உடல் எடையைக் குறைக்கவும் வழிவகுக்கிறது.