வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 16 மே 2014 (12:40 IST)

நாடு முழுவதும் 989 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

16 வது நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் 989 மையங்களில் நடைபெறுகின்றன.காலை 9.30 மணிக்கு முதல்கட்ட முடிவுகளின் நிலவரம் வெளியிடப்பட உள்ளது. அதன்பிறகு படிப்படியாக முடிவுகள் வெளிவரத் தொடங்கும். 
 
மாலை 5 மணிக்குள் பெரும்பாலும் அனைத்து முடிவுகளும் வெளிவந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, வாக்கு எண்ணிக்கை இரவு நேரத்திலும் நீடித்தால் அதற்கான வசதிகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
 
நாட்டின் 16 வது மக்களவைக்கு 9 கட்டங்களாக அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 8,251 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
 
தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, முதலில் காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அரைமணி நேரத்துக்குப் பின்னர் மின்னணு ஓட்டு எந்திரத்தில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 42 மையங்களில் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.