1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Webdunia

மகள்களை ஆட்டோவுடன் எரித்து கொன்ற தந்தை

FILE
குஜராத்தில் தனது இரண்டு மகள்களை ஆட்டோவுடன் ஒரு நபர் எரித்து கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு மனைவியோடு கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

தனது மகள்களை தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் கொண்டுவிடும் வழக்கமுடைய கோவிந்த், வழக்கம்போல் 2 மகள்களையும் பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்து சென்றார்.

மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோபமாக இருந்த கோவிந்த் பள்ளிக்கு செல்லும் வழியில், மேகானிநகர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீர் என்று ஆட்டோவை நிறுத்தி, 2 மகள்களுடன் ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் தீ வேகமாக பரவியதால் 2 சிறுமிகளும் கருகி பரிதாபமாக இறந்தனர். உடனே தந்தை தப்பி ஓட முயன்றார். அவரை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.