சுண்டல் விற்பது முதல் சடலம் எரிப்பது வரை 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலைகள்
ஒடிசாவை சேர்ந்த பொறியாளர் ஒருவர் அவருக்கு விருப்பமான பணி எது என்பதை கண்டறிய 28 வாரங்கள், 28 மாநிலங்களில் 28 வேலை செய்து புது முயற்சியை மேற்கொண்டுள்ளார். ஒடிசாவை சேர்ந்தவர் ஜுபனஷ்வா மிஸ்ரா. இவருக்கு வயது 29. இவர் இவரது பெற்றோர் விருப்பத்திற்காக பொறியியல் படித்து, பொறியாளராக 2 வருடம் பணிபுரிந்தார்.பின்னர் தனக்கு எந்த வேலை பிடிக்குமென தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 28 மாநிலங்களில் தொடர்ந்து 28 வாரங்கள் 28 வேலைகளை செய்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வாரத்திற்கு ஒரு வேலை என்னும் திட்டத்தை இவர் வகுத்து அதனை வெற்றிகரமாக நடைமுறை படுத்தியுள்ளார்.
அதன்படி, தமிழகத்தில் சுண்டல் விற்கும் வேலை, ஹரியானாவில் புகைப்படக்காரர், அசாமில் டீ இலை தொழிலாளி வேலை என பல வேலைகளை பார்த்துள்ளார்.