வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 16 ஏப்ரல் 2016 (16:57 IST)

100 வயது மூதாட்டியிடம் பாலியல் பலாத்காரம் : 18 வயது வாலிபர் கைது

மகாரஷ்டிராவின் தானே நகரில் வசிக்கும் ஒரு 100 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த ஒரு வாலிபரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.


 

 
தானே நகரில் கல்யாண் எனும் பகுதியில் உள்ள காலோகான் கிராமத்தில் 100 வயது உடைய மூதாட்டி வசித்து வருகிறார். அவரின் வீட்டின் அருகே அக்‌ஷய் பொரொடே(18) என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். 
 
சம்பவத்தன்று, தூங்கிக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் வீட்டிற்கு சென்ற, அந்த வாலிபர், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் இன்று கைது செய்யப்பட்டார்.
 
பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 100 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.