1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 22 மார்ச் 2016 (12:17 IST)

இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி பணம் கேட்டு மிரட்டும் காவல்துறை ஆய்வாளர்

ஆபாசமாக பேசி 50 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டுவதாக மும்பை ஓஷிவாரா காவல்துறை ஆய்வாளர் மீது இளம்பெண் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.


 

 

 
மும்பை ஓஷிவாரா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
 
இவர், குஜராத்தைச் சேர்ந்த பிரதிக் என்பவருடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வரந்துள்ளார்.
 
இதை பயன்படுத்தி அந்த பெண்ணிடம் பிரதிக் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகின்றது. அத்துடன் அவரை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.
 
மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினால் இருவரும் உல்லாசமாக இருந்தபோது, எடுத்த ஆபாச படங்களை வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
 
இதனால் மனமுடைந்த அந்த இளம்பெண் காவல்துறையினரிடம் இது குறித்து புகார் கொடுத்துள்ளார்.
 
இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் ஓஷிவாரா காவல்துறையினர் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து பிரதிக்கை கைது செய்துள்ளனர். அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
 
இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறை ஆய்வாளர் பரமேஷ்வர் இளம் பெண்ணை பலமுறை காவல் நிலையத்திற்கு விசாரணை என்ற பெயரில் அழைத்துள்ளார்.
 
அப்போது, ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்துதாக கூறப்படுகின்றது. அத்துடன், பிரதிக்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்த இளம்பெண்ணின் ஆபாச படத்தை போட்டு காண்பித்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
 
இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தயார் செய்தது உள்ளிட்ட வகைகளில் தனக்கு ரூ.50 ஆயிரம் செலவு ஆனதாகவும், அந்த தொகையை தரவில்லை என்றால் ஆபாச படங்களை இணைய தளத்தில் பரப்பி விட்டு விடுவேன் என்றும் கூறி அவர் மிரட்டியதாக தெரிகிறது. 
 
இதைத் தொடர்ந்த, அந்த இளம்பெண் காவல்துறையினரின் இணையதளத்தில் காவல்துறை ஆய்வாளர் பரமேஷ்வர் மீது புகார் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.