வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: சனி, 17 அக்டோபர் 2015 (19:35 IST)

கள்ளக்காதலனின் மீது ஆசிட் வீசிய காதலி : ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் திருமணமான ஒரு பெண் தன்னுடைய கள்ளக்காதலனின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திரமாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி(31). இவர் திருமணமானவர். கீதாஞ்சலிக்கும் அதே பகுதியைச் சேர்ந்தவரும், தன்னை விட ஏழு வயது இளையவருமான வெங்கடேஸ்வரலு(23) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
 
இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். வெங்கடேஸ்வரலு கீதாஞ்சலியிடம் பணம் கொடுத்திருந்தார். தனக்கு திருமணம் ஆகப்போவதால், அந்த பணத்தை திருப்பித் தருமாறு கீதாஞ்சலியிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின், இன்று இரவு என் வீட்டிற்கு வா பணம் தருகிறேன் என்று கீதாஞ்சலி கூறியுள்ளார்.
 
அதனை நம்பி வெங்கடேஸ்வரலு, அவரின் வீட்டிற்கு போயுள்ளார். அங்கு மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில், வெங்கடேஸ்வரலு மீது கீதாஞ்சலி ஆசிட் ஊற்றியுள்ளார். இதில் முகம் மற்றும் உடல் வெந்த நிலையில் வெங்கடேஸ்வரலு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கீதாஞ்சலி தலைமறைவாகி விட்டார்
 
போலிசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், “நான் திருமனம் செய்யக்கூடாது என்றும், கீதாஞ்சலியுடனான கள்ளத்தொடர்பை தொடர வேண்டும் என்றும் அவள் என்னை வற்புறுத்தினாள். நான் அதை மறுத்தேன். அதனால் என்மீது கீதாஞ்சலி ஆசிட் ஊற்றிவிட்டாள்” என்று கூறியுள்ளார்.    
 
தலைமறைவான கீதாஞ்சலியை போலிசார் தேடி வருகின்றனர்.