வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2015 (16:38 IST)

25ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த மத்திய அரசு திட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக, வரும் 25ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது.


 
 
26ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு பாஜக அரசு அனைத்து காட்சிகளின் ஆதரவையும் நாடி வருகிறது. இந்நிலலையில் டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், 25ஆம் தேதி கூட்டத்தை நடத்தலாம் என்றும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது, வெங்கய்ய நாயுடு தலைமையில் நடைபெறும் இந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் கலந்தாலோசித்து தேதியை மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதேபோல், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையிலும் தனியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் 26ஆம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது.