வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2017 (06:15 IST)

அயோத்தி ராமர் கோயில் கட்ட எதிர்ப்பு தெரிவிக்குஇம் துரோகிகளின் தலை துண்டிக்கப்படும்: பா.ஜனதா எம்.எல்.ஏ

பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பாஜக ஆதரவாளர்களும், சிவசேனா கட்சியினர்களும், ஒருசில பாஜக தலைவர்களும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசி வருவதாக அவ்வப்போது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர் அந்த வகையில்  ஆந்திராவை சேர்ந்த எம்.எல்.ஏ டி. ராஜா சிங். என்பவர், ;'ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக துரோகம் செய்யும் நபர்களின் தலை துண்டிக்கப்படும் என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியுள்ளார்.



 


ஆந்திராவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் எம்.எல்.ஏ டி. ராஜா சிங் பேசியதாவது: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற ஒவ்வொரு இந்துவின் கனவும் நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேசிய நபர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால், மிகப்பெரிய குழப்பத்தை நாடுமுழுவதும் உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.

நான் இதை வரவேற்கிறேன். உண்மையிலேயே நாங்கள் கடந்த சில ஆண்டுகளாக இதற்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே, துரோகிகளாக உங்களுடைய தலையை தூக்கும்போது, நாங்கள் உங்களை தலையை வெட்டுவோம். அயோத்தில் ராமர் கோவில் கட்டுமானத்தை தடுக்க யாருக்கும் தைரியம் கிடையாது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவது உறுதி. ராமர் கோயில் கட்டுமானத்தை தடுக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரையும், துரோகியாகவே கருதுவேன்' என்று கூறியுள்ளார்.