மூன்று மாநிலங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது
16 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான ஒன்பதாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு உத்தர பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 41 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த வாக்குப்பதிவில் பல நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். இதுவரை 8 கட்ட தேர்தல்களாக 502 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் நேருக்கு நேர் மோதும் வாரணாசி தொகுதி உட்பட 3 மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் 18 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 17 தொகுதிகளிலும், பீகார் மாநிலத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.