செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 6 நவம்பர் 2025 (08:14 IST)

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து பேரணி. மறுநாளே மம்தா பானர்ஜிக்கு விண்ணப்பம் வழங்கிய பூத் அதிகாரி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு, கொல்கத்தாவில் உள்ள அவரது காளிகாட் இல்லத்தில், அவரது பூத்தின் பூத் நிலை அதிகாரி சிறப்பு வாக்காளர் திருத்தத்துக்கான வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை நேரில் வழங்கினார்.
 
தேர்தல் ஆணைய விதிகளின்படி, இந்த படிவத்தை முதலமைச்சரை தவிர வேறு யாரிடமும் கொடுக்க ஆரம்பத்தில் மறுத்தார். பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு, மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து படிவத்தை பெற்றுக்கொண்டார்.
 
முதலமைச்சர் மம்தா இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை எதிர்த்து பேரணி நடத்திய மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பேரணியில் பேசிய மம்தா இந்த SIR நடவடிக்கை, மத்திய பாஜக அரசாங்கத்துடன் தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து மேற்கொள்ளும் முறைகேடு என்று குற்றம் சாட்டினார். 
 
அத்துடன் மத்திய அரசுக்கு எதிராக பேசுபவர்களை பங்களாதேஷி என்று முத்திரை குத்துவதாகவும், இது சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத பாஜகவின் அறியாமை என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
 
Edited by Siva