1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : புதன், 11 ஜூன் 2014 (13:59 IST)

இமாச்சல பிரதேச ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் - படங்கள்

ஐதராபாத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றபோது அங்கு 24 மாணவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.இந்த துயர சம்பவத்தின் வீடியோ பதிவு இணையதளங்களில் வெளியிடபட்டுள்ளது .
ஐதராபாத்தில் உள்ள வி.என்.ஆர் விக்னன ஜோதி பொறியியல் கல்லூரியை சேர்ந்த 2 ஆம் ஆண்டு மாணவர்கள்சுமார் 46 பேர் 10 நாள் சுற்றுலாவிற்காக  இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனர்.
அப்போது பியாஸ் நதி அருகே சென்ற சில மணாவர்கள் அங்கு நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, திடீரென தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் 24 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர் 
 

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்கள் அனைவரும் பலியாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

இந்த துயர சம்பவத்தின் வீடியோ பதிவு இணையதளங்களில் வெளியிடபட்டுள்ளது