அதிகாலை 2:45 மணிக்கு வேலை கொடுத்த மேலதிகாரி.. செய்யாததால் நடவடிக்கை: இளம்பெண்ணின் ஆதங்க பதிவு..!
இந்தியாவின் முன்னணி 'ஆசட் அண்டர் மேனேஜ்மென்ட்' (AUM) நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர், தனது மேலதிகாரியால் ஏற்பட்ட உச்சகட்ட மன அழுத்தத்தையும், பணிச்சூழலையும் விவரித்து ரெடிட்டில் பதிவிட்ட பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 14 மணி நேரம் வேலை செய்தும், வார இறுதி நாட்களில் உழைத்தும், தனது ஆன்-சைட் மேலதிகாரி அதிகாலை 2:45 மணிக்கு செய்தி அனுப்பி உடனடியாக பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்த்ததாக அவர் குற்றம் சாட்டினார். தான் தூங்கியதால் பதிலளிக்க தவறியபோது, அந்த மேலதிகாரி புகார் அளித்ததால் நிலைமை மேலும் சிக்கலானது என்று தெரிவித்தார்.
"நான் முன்பு வேலையை விரும்பிச் செய்தேன், ஆனால் இப்போது என் நிம்மதியை இந்த பணி அழித்துக்கொண்டிருக்கிறது," என்றும், பயனற்ற மேலாளர் செல்வாக்குள்ள மேலதிகாரிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு பதிலளித்த இணையப் பயனர்கள், அவருடைய மன அமைதியை காக்க உடனடியாக வேலையை விட்டு வெளியேறுமாறு ஒருமனதாக ஆலோசனை வழங்கினர். மேலும், தவறு இல்லாதபோது மன்னிப்பு கேட்பதன் மூலம், இத்தகைய அத்துமீறிய கட்டுப்பாட்டு சூழலை சாதாரணமாக ஆக்க வேண்டாம் என்றும் பலர் அறிவுறுத்தினர்.
Edited by Siva