வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 7 ஏப்ரல் 2016 (12:22 IST)

விஜய் மல்லையா சொத்து விவரங்களை ஏப்ரல் 21க்குள் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்

மனைவி, குழந்தைகள் மற்றும் தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களின் விவரங்களையும் ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



 

 
விஜய் மல்லையா எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகளில் இருந்து 9 ஆபிரம் கோடி ரூபாய் கடன் பெற்றார்.
 
இந்த கடன்தொகையை திரும்பப் பெறுவது தொடர்பாக அவருக்கு கடன் கொடுத்த அனைத்து வங்கிகளும் ஒன்றாக சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. 
 
இந்நிலையில், விஜய் மல்லையா சார்பில் மார்ச் 30 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
 
அந்த அறிக்கையில், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் அளித்த வங்கிகளுக்கு ரூ 4 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த விஜய் மல்லையா முன்வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. 
 
இது குறித்து, ஒருவாரத்துக்குள் பரிசீலித்து முடிவுசெய்யும்படி அவருக்கு கடன் அளித்த வங்கிகளை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
 
அத்துடன் இந்த வழக்கின் மறுவிசாரணை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
 
அதன்படி, இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்த மல்லையாவின் கோரிக்கையை வங்கிகள் நிராகரித்தன.
 
மேலும், மனைவி, குழந்தைகள் மற்றும் தனக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களின் விவரங்களை ஏப்ரல் 21 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று விஜய் மல்லையாவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
இந்நிலையில், மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.