வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீர்மணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2015 (16:25 IST)

சிறை கைதிகளுடன் அதிகாரி இயற்கைக்கு மாறான உறவு ஆபாச இணையதளங்களில் பரவிய வீடியோ

பீகார் மாநிலம் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைசாலையில் துணை சிறை அதிகாரியாக இருப்பவர் கிரிபா சங்கர் பாண்டே. இவர் சிறை கைதிகளுடன் இயற்கைக்கு மாறான வகையில் உறவு கொள்ளும் வீடியோ ஆபாச இணைய தளங்களில் பதிவேற்றம் செய்யபட்டுள்ளது. இது சிறைத்துறை நிர்வாகத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 
சிறை அதிகாரி சிறையில் உள்ள கைதிகளை கட்டாயபடுத்தி இயற்கைக்கு மாறான உறவு கொண்ட வீடியோ வைரலாக பரவி வருகிறது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
சில கைதிகள் சிறை அதிகாரியை அவமானப்படுத்த வேண்டும் என இதை செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். அதிகாரியின் உத்தரவை மறுத்த போது அவர்களை அவர் அடித்து உதைத்துள்ளார். பாண்டேவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சில கைதிகள் அங்கு நடக்கும் எல்லா விவரங்களையும் வீடியோ எடுத்து ஆபாச இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். சில சிறை கைதிகள் கூறும் போது நீதி கிடைக்க வேண்டி சில வீடியோக்கள் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கபட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறினர்.
 
இந்த குற்றசாட்டுகளை கிரிபா சங்கர் மறுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கிஷன்கஞ்ச்  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு உத்தரவிட்டுள்ளார்.