வியாழன், 12 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 நவம்பர் 2025 (12:15 IST)

உரம் வாங்க 2 நாட்கள் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு.. இப்படியும் ஒரு ஆட்சியா?

உரம் வாங்க 2 நாட்கள் வரிசையில் நின்ற பெண் உயிரிழப்பு.. இப்படியும் ஒரு ஆட்சியா?
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், உர விநியோக மையத்தின் வரிசையில் இரண்டு நாட்கள் காத்திருந்து, கடுங்குளிரில் இரவு முழுவதும் தங்கியிருந்த 50 வயது பழங்குடியின பெண் பூரியா பாய் உயிரிழந்தார்.
 
செவ்வாய்க்கிழமை உரம் கிடைக்காததால், அவர் மறுநாள் வரை மையத்திற்கு வெளியே குளிரில் இரவை கழித்ததால் உடல்நிலை மோசமடைந்தது. உரிய நேரத்தில் அவசர ஊர்தி வராததால், ஒரு விவசாயி அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து குணா மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
மாவட்ட ஆட்சியர், உர இருப்பு போதுமானதாக இருப்பதாக கூறி, உயிரிழந்த பெண்ணுக்கு உயர் இரத்த சர்க்கரை இருந்ததாக விளக்கம் அளித்தார். ஆனால், உள்ளூர் அறிக்கைகள் பல மையங்களில் உர தட்டுப்பாடு மற்றும் ரூ.274 மதிப்புள்ள உரம் ரூ.400க்கு விற்கப்படுவது போன்ற முறைகேடுகள் நடப்பதாக கூறுகின்றன. 
 
மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி வழங்க உத்தரவிட்டார், ஆனால் உரத் தட்டுப்பாடு பற்றிப் பேச மறுத்துவிட்டார்.
 
Edited by Siva