வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 6 ஜனவரி 2016 (04:17 IST)

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை - தருண் விஜய் தகவல்

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என தருண் விஜய் தெரிவித்தரா்.
 

 
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்ட சேவா பாரதி நிர்வாகிகளை தருண்விஜய் பாராட்டினார்.
 
பின்பு, நிவாரண பணிக்காக ரூ.20 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில், கனமழையால் பெரும் துன்பத்திற்கு உள்ளான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தது பாராட்டுக்குரிய செயல். தமிழக மக்களின் இந்த செயலை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது.
 
வெள்ள நிவாரண உதவியாக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை வழங்கி உள்ளேன். இதில், நிவாரண பணி மற்றும் கட்டிட பணிக்காக சேவாபாரதியிடம் ரூ.20 லட்சம் வழங்கி உள்ளேன்.
 
மேலும், மனிதவள மேம்பாட்டு துறை மூலம் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்து சர்வதேச அளவில் பரப்புவேன். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சிலையை பிப்ரவரி மாதம் திறக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.