இந்திய எல்லைக்குள் நுழைந்த மூன்று பாகிஸ்தான் சிறுவர்கள் கைது
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மூன்று பாகிஸ்தான் சிறுவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
சலிம், சாஜன், சாவல் ஆகிய பனிரெண்டு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட மூன்று சிறுவர்கள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மார் மாவட்டத்தில் உள்ள குரியா பேரி கிராமத்திற்கு அருகே உள்ள கட்டுப்பாட்டு எல்லை பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைந்த போது, பாதுகாப்பு படையினரிடம் பிடிபட்டனர்.
இந்த மூன்று சிறுவர்களும் வழிதவறி வந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர்களிடம் சோதனை செய்தபோது எந்த ஆயுதமும் இல்லை. இருந்தாலும் மூவரையும், விசாரணைக்குப் பிறகு பாகிஸ்தானிடம் இந்திய ஒப்படைக்க உள்ளது.