வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2023 (15:15 IST)

நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி தற்காலிகமாக ரத்து...

delhi protest players
மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக வரும் ஜூன் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்திய  மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முதல்  டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.

சமீபத்தில், மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீஸாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.  இதில், பஜ்ரங் புனியா, சாக்சி மாலிக், உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு,  மல்யுத்த வீரர்கள் ஜந்தர் மந்தரில் போட்டியிருந்த கொட்டகைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இதனை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

பின்னர்,   தேசத்திற்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்தனர் அதன்படி, ஹரித்வாருக்கு பேரணியாக சென்று  நதியில் பதக்கங்களை வீசுவோம் என்று  சாக்சி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா தெரிவித்தனர்.

டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப் போவதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்தில் மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு  நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லையென்றால் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக  வரும் ஜூன் 9 ஆம் தேதி  நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று வடமாநில விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்திருந்தார்.

அதன்படி,  ''மல்யுத்த வீரர்களின் குறைகளை அரசு நிவர்த்தி செய்து, பிரிஜ்பூ ஷன் சிங்- ஐ கைது செய்ய வேண்டும்.  இல்லையென்றால் வரும் ஜூன் 9 ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தரில்  போராட்டம் நடத்துவோம்'' என்று வடமாநில விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மல்யுத்த வீரர்களுடன் மத்திய  அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விவசாயிகள் பேரணி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.