5 மாநில தேர்தல் முடிவை நிர்ணயிப்பது 3 பெண்களா? அவர்கள் யார் யார்?
2026ஆம் ஆண்டில் நடைபெறும் 5 மாநில சட்டமன்ற தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கப்போவது அரசியல் கூட்டங்களோ அல்லது வாக்குறுதிகளோ அல்ல; மாறாக மூன்று மாநிலங்களை சேர்ந்த மூன்றுவகை சாமானிய பெண்களே. தமிழகத்தின் இல்லத்தரசி, வங்காளத்து பெண் வாக்காளர் மற்றும் கேரளத்து 'கல்பைஃப்' ஆகிய மூவருமே இந்த தேர்தலின் நிஜமான சக்திகள்.
தமிழகத்தில் திமுக வழங்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன்களுக்கும், அதிமுகவின் இரட்டிப்பு பண உதவி மற்றும் இலவச பிரிட்ஜ் திட்டங்களுக்கும் இடையே இல்லத்தரசிகள் ஒரு 'ஜூரி' போல செயல்படுகின்றனர். இலவசங்கள் மகிழ்ச்சிதான், ஆனால் எங்களுக்குத் தேவை நிரந்தர வேலைவாய்ப்பு" என்பதே அவர்களின் குரலாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் 'லக்ஷ்மிர் பண்டார்' போன்ற பண உதவி திட்டங்கள் இருந்தாலும், அங்குள்ள பெண்கள் தங்களின் பாதுகாப்பு குறித்தே அதிகம் கவலைப்படுகின்றனர்.
கேரளாவிலோ, ஈரான் போரினால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்கள் பணம் அனுப்ப முடியாமல் தவிப்பது, அந்த மாநில பெண்களின் வாக்குரிமையை வாழ்வாதாரம் நோக்கி திருப்பியுள்ளது.
17.4 கோடி வாக்காளர்களின் தலைவிதியை, இந்த மூன்று வகை பெண்களின் எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் மட்டுமே தீர்மானிக்க போகின்றன.
Edited by Siva