வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 8 டிசம்பர் 2014 (17:03 IST)

பலமுறை பலாத்காரம் செய்து 3 முறை கருக்கலைப்பிற்கு உள்ளாக்கிய தலைமை ஆசிரியர் கைது

பலமுறை பலாத்காரம் செய்து 3 முறை கருக்கலைப்பிற்கு உள்ளாக்கிய தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
ஆந்திராவில் கடந்த அக்டோபர் மாதம் 16 வயது பள்ளி சிறுமி 3 முறை கருக்கலைப்பு செய்ததையடுத்து விஜயவாடா மருத்துவமனையில் உயிரிழந்தார். சிறுமியின் இறப்பு குறித்த கவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
 
விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். மாணவி பள்ளி நேரம் கழித்து மற்ற மாணவர்களுடன் இணைந்து சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்வது வழக்கம். அப்போது பலமுறை தலைமை ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
 
மாணவிக்கு தலைமை ஆசிரியர் கல்வி கட்டணம் கட்டி வந்துள்ளார். மாணவின் படிப்பின் மீது அக்கறை கொண்டுதான் ஆசிரியர் உதவி செய்தார் என்று பாதிக்கப்பட்ட மாணவின் பெற்றோர்கள் நினைத்துள்ளனர். ஆனால் மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய தலைமை ஆசிரியர் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து அப்பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர், மாணவிக்கும் - பழைய தலைமை ஆசிரியருக்கும் இடையிலான உறவை காரணம் காட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
 
பின்னர் 3 முறை கருக்கலைப்பும் செய்ய வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இவ்விவகாரம் தொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டனர். 
 
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் விசாரணை அதிகாரி சுதாகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ’பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் தங்களது மற்ற இரண்டு குழந்தைகளின் வாழ்க்கைக்கு பயந்து புகார் அளிக்க வரவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பம் வெளியே கூறிவிடாமல் இருக்க பள்ளியின் தலைமை ஆசிரியர் மூன்றாவது நபர் வழியாக அரை ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.