வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 6 ஜூன் 2015 (11:33 IST)

காஷ்மீரில் எல்லை தாண்ட முயன்ற தீவிரவாதிகள் சுட்டு கொலை

இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை, இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
 

 
ஜம்மு காஷ்மீரில், பரமுல்லா மாவட்டத்தில் உள்ள துட்காரலி எல்லை வழியாக இந்தியாவுக்குள் இன்று காலை நேரத்தில் 2 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
 
இதைக் கண்டு, உஷாரான இந்திய ராணுவ வீரர்கள் அந்த தீவிரவாதிகளை உயிருடன் பிடிக்க கடும் முயற்சி செய்தனர். ஆனால், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ராணுவமும் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
 
இதன் மூலம், தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் நுழையும் முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள்  முறியடித்தனர்.