1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (13:29 IST)

தமிழரை அடித்து நிர்வாணமாக்கிய கன்னட வெறியர்கள்: தொடரும் அட்டூழியம்!

தமிழரை அடித்து நிர்வாணமாக்கிய கன்னட வெறியர்கள்: தொடரும் அட்டூழியம்!

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் தொடர் போராட்டங்களும், வன்முறைகளும் நடந்து வருகிறது. வெறி பிடித்த கன்னடர்கள் தமிழர்களை அடித்து துன்புறுத்தி வருகின்றனர்.


 

 
 
தமிழகத்தில் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடந்தாலும் அவை முறியடிக்கப்பட்டு, முழுமையாக சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் கர்நாடகாவில் முழுமையாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டும் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
 
இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலம் சித்தூரில் தமிழக பதிவெண் கொண்ட டேங்கர் லாரியை வழிமறித்து அதனை தாக்கினர். லாரியை ஓட்டி வந்த ஓட்டுனரை அடித்து அவரை நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர்.
 
காவிரி கர்நாடகத்துக்கு தான் சொந்தம் என அவரை கூற வைத்தும் தாக்கியுள்ளனர். கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் அவரை நிர்வாணமாக்கி அதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வன்முறை செயலில் ஈடுபட்டது கன்னட ரக்‌ஷன வேதிகே அமைப்பினர்.