1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (19:25 IST)

நித்தியானந்தா நாட்டின் பிரதமர் ஒரு தமிழ் நடிகையா? அதிர்ச்சி தகவல்

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா ஈகுவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அந்த தீவை தனது பெயரில் தனி நாடு என அறிவித்தார் என்பது தெரிந்ததே. அந்த தனி நாட்டின் கொடி சின்னம் உள்பட பலவற்றை அவர் ஆன்லைனில் அறிமுகப்படுத்தி இந்த நாட்டில் குடிமகனாக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்றும் குடிமகனாகவும் அதற்கு இந்து என்ற ஒரு தகுதி மட்டுமே போதும் என்று அறிவித்து இருந்ததாக செய்திகள் வெளியாகியது
 
இந்த நிலையில் நித்யானந்தா உருவாக்கும் நாட்டின் பிரதமராக ஒரு தமிழ் நடிகையை அவர் நியமனம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நித்தியானந்தாவின் பக்தர்கள் அம்மா என்று அழைக்கும் அந்த நடிகை தான் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்பு ஏற்பதாகவும் இந்நாட்டிற்கு அதிகாரம் மற்றும் உரிமை பெற இந்நாட்டை ஐநாவில் பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தற்போது தயாரித்து தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது 
 
ஆனால் போலீஸ் தரப்பினர், நித்யானந்தா எந்த நாட்டிற்கும் தப்ப வில்லை என்றும் இமயமலையில் தான் அவர் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் இமயமலையில் இருந்துதான் ஒளிபரப்பாகி உள்ளதாகவும் விரைவில் அவரை கைது செய்வோம் செய்வோம் என்றும் கூறியுள்ளனர்