வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 1 மார்ச் 2017 (21:33 IST)

பாஜக அலுவலகத்தை சூறையாடிய மாணவர்கள்

மணிப்பூர் சட்டமன்ற தேர்தல் நடப்பெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் பாஜக. கட்சி அலுவலகத்தை இன்று மாணவர்கள் சூறையாடினர்.


 

 
மணிப்பூர் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இந்த மாநில தேர்தல் இரண்டு கட்டமாக நடைப்பெற உள்ளது. முதற் கட்டம் மார்ச் 4ஆம் தேதியும், இரண்டாம் கட்டம் மார்ச் 8ஆம் தேதி நடைப்பெறுகிறது.
 
இந்நிலையில் கே.எஸ். என்ற மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள், இம்பாலில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தை சூறையாடினர். சம்பவத்திற்கு முன்னதாக மாணவர்கள் அமைப்பினர் பாஜக தலைவர்களை சந்திக்க வேண்டும் என அனுமது கோரி அலுவலகம் வாசலில் காத்திருந்தனர்.
 
ஆனால் பாஜக தலைவர்கள் மாணவர்களிடம் பேச முன்வரவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் அலுவலகம் உள்ளே புகுந்து அனைத்து பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
 
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தியதாக இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
 
இதுதொடர்பாக மணிப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.