1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2016 (02:47 IST)

இறந்த தாயின் சடலத்தை ரிக்‌ஷாவில் கொண்டு சென்ற மகன் [விடியோ]

ஒடிசா மாநிலத்தில் இறந்த தாயின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் சேவை மறுக்கப்பட்டதால் ரிக்ஷாவில் சடலத்தை தள்ளிக் கொண்டேச் சென்ற துயரச் சம்பவம் நடந்துள்ளது.
 

 
ஜெய்ப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த பழங்குடியின பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, தனது தாயின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல ‌மருத்துவமனை நிர்வாகத்திடம் ‌அவரது மகன் வாகன உதவி கேட்டதாக தெரிகிறது.
 
ஆனால், மருத்துவமனை நிர்வாகம் வாகனம் இல்லை என்று கூறியதாக இறந்த தாயின் மகன் தெரிவித்துள்ளார். விஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு வாகனங்கள் முதலுதவிக்காக சென்றதால் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாமல் போனதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.
 
மேலும், தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் ரூ. 12,000 பணம் கேட்டதால் வேறு வழியின்றி தள்ளுவண்டி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் தனது தாயின் சடலத்தை ஏற்றிச் சென்றுள்ளார்.

வீடியோ இங்கே:
 


Courtesy : ANI News