வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ashok
Last Updated : சனி, 5 டிசம்பர் 2015 (20:05 IST)

ராமர் கோயில் கட்டும் தேதியை ஆர்எஸ்எஸ் தலைவர் அறிவிக்க வேண்டும்: சிவசேனா

இதுகுறித்து அக்கட்சியின் நாளிதழான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் "ராமர் கோயில் தொடர்பாக பலர் ரத்தம் சிந்திய நிலையிலும் அங்கு ஒரு கோயிலை கட்ட இயலாமல் போனால், இதற்காக உயிரை தியாகம் செய்த நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக மோகன் பகவத் எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்புக்குரியது என்றும் தற்போது, ராமர் கோயில் கட்டும் பணியை தொடங்கும் தேதியை அவர் அறிவிக்க வேண்டும்.
 
அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் தைரியம் பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்டு. இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தால் அவரது செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். சிறுபான்மையினருக்கு மட்டுமே ஆதரவான அரசு என்ற எண்ணத்தை மாற்ற ராமர் கோயிலை மத்திய அரசு கட்ட வேண்டியது அவசியமாகும். இப்போது இல்லை என்றால் எப்போதுமே அயோத்தியில் ராமர் கோவிலை கட்டமுடியாது” என்று அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
 
இந்நிலையில், தனது வாழ்நாளுக்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விரும்புவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.