தொடர்புடைய செய்திகள்
- ஏடிஎம் இயந்திரத்தில் கருப்பு அட்டை ஒட்டி நூதன திருட்டு.. 3 வட மாநில இளைஞர்கள் கைது..!
- போலி எஸ்பிஐ வங்கி தொடங்கி லட்சக்கணக்கில் மோசடி.. 4 இளைஞர்களிடம் விசாரணை..!
- மாணவர் வேடத்தில் 14 நாட்கள் சட்டவிரோத தங்கிய நபர் கைது! ஐஐடி மும்பையில் அதிர்ச்சி:
- மருமகளை மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. மாமியாரும் உடந்தை.. கொலை வழக்கில் திடீர் திருப்பம்..
- ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.
மாதம் ரூ.48 ஆயிரம் சம்பளம்! டிகிரி போதும்..! SBI வங்கியில் அசத்தலான வேலைவாய்ப்பு!
மத்திய அரசின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பாங்கு (SBI - State Bank of India)-வில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாரத ஸ்டேட் பாங்கில் 541 புரொபஷனரி அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலமாக ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு 21-30 வயதிற்குள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் முதல் நிலை தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று மூன்று கட்ட தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், பணி நியமனம் பெறுபவர்கள் மாதம் ரூ.48,480 - ரூ.85,920 வரை சம்பளமாக பெற முடியும்.
இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, கன்னியாக்குமரி, நாகர்கோவில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 14ம் தேதி வரை கடைசி அவகாசம் உள்ளது. மேலும் விவரங்களுக்கு SBI Website ஐ காணவும்.
Edit by Prasanth.K
