வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: திங்கள், 13 ஏப்ரல் 2015 (16:14 IST)

முஸ்லீம்கள், கிறித்தவர்களுக்கு கட்டாய கருத்தடை செய்ய வேண்டும்: இந்து மகாசபை தலைவர் சாத்வி சர்ச்சை பேச்சு

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்க வேண்டும் என்ற சர்சைக்குரிய கருத்தை தெரிவித்த இந்து மகாசபை தலைவர் சாத்வி தேவா தாகூர் தற்போது மீண்டும் மற்றுமொரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
 
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவ மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த அவர்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும்  நாட்டில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதை தடுக்க மத்திய அரசு அவசர நிலையை பிரகடனப்படுத்தி முஸ்லீம், கிறிஸ்தவ மக்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான் அவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என்றார்
 
அதோடு இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் இந்து கடவுள்களின் சிலைகளை வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.