வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (13:06 IST)

தத்தெடுத்த ஆந்திர கிராமத்தை பார்வையிடுகிறார் சச்சின் டெண்டுல்கர்

பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார், சச்சின்.
ஒவ்வொரு எம்.பியும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறுயுள்ளதால், அதை ஏற்றுக்கொண்ட டெல்லி மேல் சபை எம்.பியான சச்சின் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கூடூர் மண்டலத்தில் உள்ள புத்தம் ராஜு கண்டிகை கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
 
மேலும் இந்த கிராமத்திற்கான தெரு விளக்கு, சாலை வசதி போன்ற பல்வேறு அடிப்படை வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இப்பணிகளை பார்வையிட சச்சின் நவ, 16 நாளை கண்டிகை கிராமத்துக்கு நேரில் செல்லவுள்ளார். இதற்காக ஹெலிகாப்டரில் நெல்லூர் செல்கிறார்.
 
மேலும் சச்சினை மாவட்ட இணை கலெக்டர் மற்றும் சில உயர் அதிகாரிகள் வரவேற்கவுள்ளார். சச்சினின் வருகையால் ஆந்திரா முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.