அரசியலுக்கு வருகிறாரா பிரியங்கா காந்தியின் மகன்? ராபர்ட் வதேரா விளக்கம்..!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் வதேரா அரசியலில் நுழையவிருப்பதாக பரவிய தகவல் குறித்து, அவரது தந்தையும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா விளக்கம் அளித்துள்ளார்.
25 வயதாகும் ரைஹான் தற்போது அரசியலுக்கு வர இது சரியான நேரம் அல்ல என்று ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். "அவர் மிகவும் இளைய வயதில் இருக்கிறார், மேலும் தற்போது அரசியல் கடினமான காலத்தை கடந்து செல்கிறது; நியாயமான தேர்தல்கள் இல்லை" என்று அவர் குறிப்பிட்டார்.
மக்கள் விரும்பினால் மட்டுமே தான் தீவிர அரசியலில் நுழைவேன் என்றும், இல்லையென்றால் பாஜக 'வாரிசு அரசியல்' என்று விமர்சிக்கும் என்றும் அவர் கூறினார்.
பிகார் தேர்தல் முடிவுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும், ராகுலும் பிரியங்காவும் கடினமாக உழைப்பார்கள் என்றும் ராபர்ட் வதேரா தெரிவித்தார். மேலும், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்குப்பெட்டி மூலமே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Edited by Mahendran