வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: திங்கள், 4 ஆகஸ்ட் 2014 (17:11 IST)

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனைக்கு தயார் - பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி

பாலியல் புகாரில் சிக்கியுள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, தன் மீது அளிக்கப்பட்ட புகாரில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனைக்கு தயார் என பரபரப்பான பதில் அளித்துள்ளார்.
 
குவாலியர் கூடுதல் பெண் நீதிபதி, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி மீது பாலியல் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஜனாதிபதி, இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், 'சமூகம் மற்றும் நீதியை காப்பாற்றும் பணியில் இருக்கும் என்னைப் போன்ற ஒரு தாய், மனைவி, சகோதரி இப்படி நடத்தப்பட்டால், எத்தகைய அரசியலமைப்பு இலக்குகளை நாம் பின்பற்றுகிறோம் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து தெரிவித்த தலைமை நீதிபதி லோதா, இது  தொடர்பாக முறைப்படி புகார் பெறப்பட்டுள்ளது, இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 
 
இந்த விவகாரத்தின் விளைவாக தான் வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ள கூடுதல் பெண் நீதிபதி, தன்னை மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி, அவரது வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் 'ஐடம்' பாடலுக்கு நடனமாட வற்புறுத்தியதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் தன்னை இடமாற்றம் செய்வதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்நிலையில், குற்றம் சாற்றப்பட்ட மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி இது குறித்து பேசுகையில், இவ்விவகாரம் தொடர்பாக எந்த ஒரு விசாரணையும் சந்திக்க தயார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கு தண்டனைக்கு தயார் என பதில் அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.