1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (06:19 IST)

விபத்தில் சிக்கியவர் உயிரைக் காப்பாற்றிய ராகுல் காந்தி

உத்திர பிரதேச மாநிலத்தில், ஒரு விபத்தில் சிக்கியவருக்கு, அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உடனே உதவி செய்து, அவரது உயிரைக் காப்பாற்றினார்.
 

 
உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேற்று அங்கிருந்து டெல்லி திரும்பினார்.
 
இதற்காக, லக்னோ விமான நிலையம் நோக்கி ராகுல் காந்தி, தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கபீர்பூர் என்ற இடத்தில், ஜெயந்த் சிங் (25) என்ற இளைஞர் விபத்தில் சிக்கி சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்தார்.
 
இதைக் கண்ட ராகுல் காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே, தனது காரை சாலையில் நிறுத்தி, இறங்கிச் சென்று, அந்த இளைஞர் விபத்தில் சிக்கியது குறித்து விசாரித்தார். உடனே, தன்னுடன் வந்த ஆம்புலன்சில் இருந்த டாக்டர்கள் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.
 
பின்பு, அதே ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். மேலும், இந்த விபத்து குறித்து, அந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார்.
 
ராகுல் காந்தியின் இந்த மனிதாபிமான செயலை, இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும் பாராட்டிள்ளனர்.