வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 10 டிசம்பர் 2014 (21:51 IST)

நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதால் கற்பழிப்புகள் நடக்கிறது என்னும் ஆண்கள் பாவாடை கட்டிக் கொள்ளலாம் - பிரியங்கா சோப்ரா

நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதால் கற்பழிப்புகள் நடக்கிறது என்னும் ஆண்கள் பாவாடை கட்டிக் கொள்ளலாம் என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
 
நடிகைகள் அரைகுறை உடையில் சினிமாவில் குத்தாட்டம் போடும் நடிகைகளால் தான் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கிறது என்றும், எனவே இவர்களை விபச்சாரிகள் என அறிவிக்க வேண்டும் என்றும் மும்பையை சேர்ந்த ஒரு அமைப்பினர் வற்புறுத்தி உள்ளனர். கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப் போவதாக கூறி உள்ளனர்.
 

 
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துத் தெரிவித்துள்ள இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, "பெண்களுக்கு எதிராக நிறைய வன்கொடுமைகள் நடக்கின்றன. இதனை கண்டிக்காமல் பெண்கள் குட்டை பாவாடை போன்ற ஆடைகள் அணிவதால் கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கிறது என்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. கற்பழிப்பு கொடுமைகள் காமகொடூரர்களால் நடக்கின்றன.
 
பெண்கள் ஆடை அணிவதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. நடிகைகள் குத்தாட்டம் ஆடுவதால் கற்பழிப்புகள் நடக்கிறது என்பது பொறுப்பற்ற ஆண்கள் பேசினால், இப்படிப்பட்ட ஆண்கள் பாவாடை கட்டிக் கொள்ளலாம். பெண்கள் கவர்ச்சி ஆடைகள் அணிவதை எதிர்த்து யாரேனும் நீதிமன்றத்திற்கு போனால் நானும் அதை நியாயப்படுத்தி கோர்ட்டுக்கு செல்வேன்"  இவ்வாறு அவர் கூறினார்.