1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (17:01 IST)

ஏப்.8 ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: மீண்டும் லாக்டவுனா?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் சமீபத்தில் பிரதமர் மோடி ஆலோசனை செய்தார் என்பதும் அவருடைய ஆலோசனையில் விரைவில் கொரோனா கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கொரோனா அதிகரித்து வருவதால் ஏப்ரல் 8ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பின் விரைவில் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அல்லது இரவு நேர ஊரடங்கு அல்லது முழு முடக்கம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது