வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (10:54 IST)

பிரணாப் முகர்ஜி நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து: நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரணாப் முகர்ஜி நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் "பிரணாப் முகர்ஜி, நாட்டின் விலைமதிப்பற்ற சொத்து. நீண்ட காலமாக பொதுவாழ்க்கையில் அவர் இருந்துள்ளார்.
 
அவரது அறிவுத்திறன், மற்றும் ஞானம், போற்றுதற்குரியது. அவருக்கு என மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
மேலும் அவர் நீண்ட நாள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்" இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.